12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வெழுத நிரந்தரத் தடை!

0
12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வெழுத நிரந்தரத் தடை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் கடுமையான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுத தடை:

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 12 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த வாரம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. தேர்வில் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுமைய அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை ஆனது முன்னதாக வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் நடந்து வரும் நிலையில் தற்போது பொதுத்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டனை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பாக இன்று வெளியிட்டுள்ளது.

 Spices Board வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || ரூ.20,000/- மாத ஊதியம்!  

அதன்படி தேர்வறையில் மாணவர்கள் கையேடுகள், புத்தகங்கள் போன்றவற்றை தாமாகவே ஒப்படைத்தால் அன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு அடுத்து வரும் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யும் பட்சத்தில் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விடைத்தாளை பரிமாற்றம் செய்வது கண்டறியப்பட்டால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன் சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பருவ தேர்வுகள் எழுதுவதற்கு தடை விதிக்கப்படும். வினா தாளில் விடை எழுதி அதை பிறத்தேர்வர்களுக்கு வழங்கும் வகையில் தூக்கி எறிவது கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட பாடத் தேர்வு ரத்து செய்யப்படும். இது போன்று அனைத்து வகையான குற்ற செயல்களுக்குமான தண்டனை குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!