ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்பட உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
இலவச எல்பிஜி சிலிண்டர்:
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டதின் மூலம் இதுவரை , 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. , உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தின் தகுதியுள்ள 1.75 கோடி குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
வாகன ஓட்டிகளுக்கு வந்த புதிய அலர்ட் – பணத்தை இழக்கும் அபாயம்!
அதன் படி, தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின் போது ஆண்டுக்கு இரண்டு முறை இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு ஹோலியிலும் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாநில அரசு ரூ.2,312 கோடி செலவு செய்யவதாக தெரிவித்துள்ளது.