வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு சட்டமயமாக்கல் – திமுகவின் வாக்குறுதி!

0
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு சட்டமயமாக்கல் - திமுகவின் வாக்குறுதி!

நாட்டில் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் வன்னியர்களுக்கான 10.5% உள்ள இட ஒதுக்கீடு குறித்தான தகவல்களை உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு:

நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பணிகள் மிகவும் தீவிரமாக தமிழகத்தில் நடந்து வருகிறது. பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளையும் பொது மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இருக்கும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தர்மபுரி தொகுதி திமுக வேட்பாளர் மணி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடும்போது தமிழ்நாட்டை பின்பற்றி கனடாவில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், 11 கோடியில் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு சாலை அமைத்து தரப்பட உள்ளதாகவும்.

பெண்களுக்கு ரூ.500-யில் சமையல் எரிவாயு? முதல்வரின் புதிய அறிக்கை இதோ!

மொரப்பூர் – தர்மபுரி இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாகவும், அனைத்து சுங்க சாவடிகள் அகற்றப்படும் எனவும் திமுகவின் வாக்குறுதிகளை மக்களுக்கு நினைவு கூர்ந்தார். மேலும் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடை திமுக அரசு சட்டபூர்வமாகும் என்று கூறியுள்ளார். குறிப்பாக பிஎம் கேர்ஸ் திட்டத்தில் பல்லாயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் இதற்கான பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40க்கு 40 தொகுதிகளையும் வென்று கலைஞருக்கு வெற்றிக்கனியை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!