தமிழகத்தில் வரும் சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை திறப்பு – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை திறப்பு - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை திறப்பு - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை திறப்பு – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வருகிற ஞாயிற்று கிழமை பள்ளிகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏனென்றால் அனைத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கூட்டங்கள் நடக்க இம்முறையை அமல்படுத்தியுள்ளது.

ஞாயிறுக்கிழமை பள்ளிகள் செயல்படும்:

உலக அளவில் கடந்த 2 வருட கால கட்டமாக கொரோனா என்ற பெரும் நோய் தொற்றினால் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்டதில் ஒன்று மாணவர்களின் கல்வியும். 2020 ல் தொடங்கி 2021 வரையிலும் பள்ளி ,கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்தாலும், 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை மற்றும் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது.

IPL சீசன் 15: தீபக் சஹாருக்கு பதிலாக CSK அணியில் இடம்பிடிக்கும் வீரர் இவர்தான்? ரசிகர்கள் உற்சாகம்!

பின்னர் தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைய குறைய கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. அடுத்தகட்டமாக தேர்வுகளுக்காக அடிப்படை தகவல்கள் படிப்படியாக வெளியாகியது. தேர்வுகள் வரவிருக்கும் நிலையில் பாடங்களை முடிந்த அளவில் விரைவில் நிறைவு செய்ய அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடைபெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் புதிய வகையில் வருகிற மார்ச் 20 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து வருகிற சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தமாக 52 லட்சம் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அன்று ஒரு நாள் பள்ளிக்கு வர கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!