தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தின் 5 ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதி முதல் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் நோய் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வந்தது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா முதல் அலை கட்டுப்படுத்தப்பட்ட சில மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நவ.5ம் தேதி தீபாவளி விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் 1ம் தேதி 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை – கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கான அரசாணை வெளியீடு!
விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.