தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரவும் கனமழையால் நவம்பர் 27ம் தேதி சனிக்கிழமையான நாளை மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிலையங்கள் விடுமுறை:
தமிழகத்தில் கனமழை கடந்த வாரம் முதல் பெய்து வருகிறது. முன்னதாக வட கிழக்கு பருவ மழை காரணமாக பெரு மழை பெய்தது. அதற்கே தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்தது. அதன்பிறகு, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், பின்னர், அது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், வட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. இந்த காரணங்களினால் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்டது.
டிச.15 முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம் – போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!
அந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கரையை கடந்து சென்ற பிறகு மழை பாதிப்புகள் குறைந்தது. தற்போது அடுத்த 3 நாட்களில் மேலும், ஒரு புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்க கடலில் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் தமிழக மாவட்டங்களில் முழுவதும் கனமழை இடைவிடாது பெய்து வந்தது. இதனால் நவம்பர் 26ம் தேதியான இன்று தமிழ்கத்தின் 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
திருப்பூரில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில், திருவாரூர் மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் நாளையும் கனமழை பொழியும் என்று முன்னதாக எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தால் நவம்பர் 27ம் தேதியான நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது புதுக்கோட்டையில் அதிகனமழை பெய்து வருகிறது இதனால் புதுக்கோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் திருவாரூர், தூத்துகுடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.