LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – மானியம் குறித்த அப்டேட்!
எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் மானியம் இல்லாமல் சிலிண்டர்களை வழங்க அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோருக்கு மட்டும் சிலிண்டர் வழங்க வாய்ப்பிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
LPG கேஸ் சிலிண்டர்:
சமையல் எரிவாயுவின் விலை அனைத்து நாடுகளிலுமே தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை முறையாக திருத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே நான்கு முறை சிலிண்டரின் விலை உயர்ந்துவிட்டது. தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் பங்குச்சந்தை வெகுவாக மிகவும் சரிவடைந்தது. அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளதால் சிலிண்டர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
BOI வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1000ஐ தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் சிலருக்கு மானியம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிலிண்டர் மானியம் பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. மானியம் இல்லாமல் சிலிண்டர்களை வழங்கலாம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோருக்கு மட்டும் சிலிண்டர் வழங்கலாம் என ஏதேனும் ஒரு திட்டத்தை அரசு மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த மானியத்தின் மூலமாக ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்கப்படும். மேலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும், கடந்த பல மாதங்களாக எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ரூ.10 லட்சம் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் என்கிற விதி அமலில் இருக்கும் என்றும், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மானியத்தின் பலனை தொடர்ந்து பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரித்தது. 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை தற்போது சென்னையில் ரூ.900.50 க்கு விற்பனையாகி வருகிறது.