ஊழியர்களுக்கு செக் வைத்த கூகுள் நிறுவனம் – இதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தல்!!

0
ஊழியர்களுக்கு செக் வைத்த கூகுள் நிறுவனம் - இதை செய்ய
ஊழியர்களுக்கு செக் வைத்த கூகுள் நிறுவனம் - இதை செய்ய
ஊழியர்களுக்கு செக் வைத்த கூகுள் நிறுவனம் – இதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தல்!!

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், தனது ஊழியர்கள் PERM சான்றிதழை பெற முயற்சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், பணிநீக்க நடவடிக்கையிலும் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முக்கிய அறிவிப்பு

கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கூகுள் நிறுவனமும் தனது ஊழியர்களில் ஆறு சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கான செயல்முறைகளை கூகுள் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Spotify நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – 600 பேர் பணிநீக்கம்!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதாவது, அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக செல்லும் ஊழியர்கள் அந்நாட்டின் தொழிலாளர் துறையின் சான்றிதழை (PERM) பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், கூகுள் நிறுவன ஊழியர்கள் இந்த PERM சான்றிதழை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில், புதிதாக PERM சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு கூகுள் நிறுவனம் பெரிய செக் வைத்துள்ளது. தற்போது கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் ஊடகங்களில் விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!