விஜய் டிவியில் புது விஸ்வரூபம் எடுத்த பாக்கியலட்சுமி – ஒரே நாளில் பிரபலம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவியில் புது விஸ்வரூபம் எடுத்த பாக்கியலட்சுமி - ஒரே நாளில் பிரபலம்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் புது விஸ்வரூபம் எடுத்த பாக்கியலட்சுமி - ஒரே நாளில் பிரபலம்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் புது விஸ்வரூபம் எடுத்த பாக்கியலட்சுமி – ஒரே நாளில் பிரபலம்! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழக இல்லத்தரசிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர் பாக்கியலட்சுமி. இதில் பாக்கியாவின் மீது ரசிகர்கள் கோபத்தை தெளித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மக்களிடத்தில் பிரபலமாகி ரசிகர்களால் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

மீண்டும் பிரபலமாகும் பாக்கியா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பத்தில் அனைத்து வீட்டு இல்லத்தரசிகளும் ரசித்து பார்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் அடுத்து என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வரக்கூடிய எல்லா எபிசோடுகளிலும் குடும்பத்தில் சண்டையும், அழுகையும் மட்டுமே காட்டப்பட்டு வந்த நிலையில் சீரியல் சூடுபிடித்துள்ளது. அதாவது பல கில்லாடி வேலைகளை செய்து கோபி ஒவ்வொரு முறையும் பாக்கியாவிடம் சிக்காமல் தப்பித்துவிடுவார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இருந்து விலகும் சுசித்ரா? அவரே சொன்ன விளக்கம்!

அது போன்று இந்த முறையும் ராதிகா வீட்டில் தங்கியிருந்த கோபி, ஏதேர்ச்சையாக வருகை கொடுத்த பாக்கியா அந்த சமயம் ஆபீஸ் மீட்டிங்கை காரணம் காட்டி தப்பித்துவிட்டார். ஆனாலும் சந்தேகம் குறையாத பாக்கியாவாக கோபியிடம் ராதிகா வீட்டில் வெளியே நின்ற அவரது காரை குறித்து கேட்ட போதும் பக்காவாக மழுப்பி பாக்கியாவை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு பாக்கியாவிற்கு எப்போது கோபியை குறித்து தெரியவரும்? என்ற கேள்விகளுடன் தொடர் நகர்கிறது. இந்நிலையில், வெளியாகியுள்ள ப்ரோமோ ஒன்றில் செழியன் வாழ்க்கையை வெறுத்தவன் போன்று எனக்கு நிம்மதியே இல்லை திருமண வாழ்க்கையில் என்று குடும்பத்தில் உள்ள அனைவர் முன்னாலும் புலம்புகிறார்.

மேலும், நான் ஜெனியுடன் இனி வாழப்போவதில்லை அதனால் விவாகரத்து செய்து கொள்கிறேன் என்று கூறியதை கேட்ட பாக்கியா கோபத்தில் பளார் என்று செழியன் கன்னத்தில் ஒரு அரை விட்டார். அதைக் கண்டு அதிர்ச்சியில் கோபி திருதிருவென முழிக்க பாக்கியாவோ விவாகரத்து செய்வது அவ்வளவு சுலபமா போச்சா. கல்யாணம் வாழ்க்கைன்னா எவ்ளோ புனிதமானதுன்னு புரிஞ்சிக்க பாரு அதவிட்டுட்டு விவாகரத்து அப்படின்னு ஏதாவது சொல்லிட்டு இருந்த ‘தொலச்சிருவேன் தொலச்சு’ என்று மாஸ் காட்டியுள்ளார். பாக்கியாவின் இந்த புது விஸ்வரூபத்தை கண்ட ரசிகர்கள் ‘ அக்கினி சிறகே எழுந்து வா ‘ என்ற மனநிலையில் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!