EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.1.5 கோடி வரை பெறலாம்!
PF அக்கவுண்ட் மூலம் சேமிக்கப்படும் பணத்திற்கு வரி கிடையாது. மேலும் 1.5 பெறுவதற்கு PF ஒரு சிறந்த வழியாகவும் இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
PF அக்கவுண்ட்:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் சேமிப்பாக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்களை பலரும் அறியாமல் உள்ளனர். PF என்பதும் ஒரு வகை சேமிப்பு தான். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணமானது பணி ஓய்வுக்கு பிறகு பெரிதும் உதவுகிறது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள் இதோ!
தற்போதைய அறிவிப்பின் படி PF கணக்கில் சேமிக்கப்படும் பணத்திற்கு மத்திய அரசு 8.5% வரை வட்டி வழங்கி வருகிறது. இந்த அளவு வட்டியானது மற்ற வங்கிகள் தரும் வைப்பு நிதி சேமிப்பு கணக்கு மற்றும் இதர மத்திய அரசு திட்டங்களுக்கு கொடுக்கப்படும் வட்டியைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. இது போன்ற அதிகமான வட்டி வழங்குவதால் பணி ஓய்வு பெற்ற ஒருவரின் கணக்கில் அதிகப்படியான தொகை இருக்கும் என EPFO தெரிவித்துள்ளது.
சையத் முஸ்தாக் அலி கோப்பை: கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு!
தற்போது 25,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவரின் PF வட்டியானது 8.5% என்னும் பட்சத்தில் 35 ஆண்டுகளில் அவருடைய PF சேமிப்பு கணக்கில் தோராயமாக ரூ. 1.65 கோடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று சேமிக்கப்படும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எந்த சூழலிலும் பணத்தை எடுக்காமல் சேமிப்பதன் மூலம் முடிவில் பெரும் தொகையை பெற முடியும். ஆனால் PF தொடங்கிய 5 ஆண்டுகளில் பணத்தை எடுக்கும் பட்சத்தில் அதற்கு வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வேலை