தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தரமான அரிசி வழங்க கோரிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தரமான அரிசி கிடைக்கும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரேஷன் அரிசி:
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, தானியம், சமையல் எண்ணெய் மற்றும் பிற மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் திமுக தலைமையிலான அரசு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கியது. மேலும் கொரோனா நிவாரணத் தொகைகளும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது என்று பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி கல், மண், தூசிகள் உள்ளதாக பயனாளிகள் கூறுகின்றனர். இந்த அரிசி சமைத்து உண்பதற்கு ஏற்றதாக இல்லை, இதனை சரி செய்து தரமான அரிசியை வழங்க வேண்டும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக மோசமான அரிசி வழங்கப்பட்டு வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதனால் மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேரூர் பகுதியில் இருக்கும் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.