தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதனால் அந்த நாட்களில் அந்த துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் விநியோகம் தடை செய்யப்படும் முன்னரே பொதுமக்களுக்கு மின்வாரியம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும். பெரும்பாலும் 2 அல்லது 3 நாட்கள் அதிகமாக மின்தடை செய்யப்படும்.
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தொடரும் வீட்டில் இருந்தே வேலை (WFH) முறை? முழு விவரம் இதோ!
இந்நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், சித்தாலம்புத்தூர், குட்டி தட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியார்பட்டி, காதி போர்டு காலனி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார். இதனால் இப்பகுதி மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.