தமிழக அரசின் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – நேர்காணல் ஒத்திவைப்பு!
தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு பணியாளர் பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் நேர்காணல் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் தேதி ஒத்திவைப்பு:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அரசுத்தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. அதனால் அரசுத் தேர்வுகளுக்கு இதுவரை தங்களை தயார்படுத்தி வரும் அனைவரும் தேர்வுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு பணியாளர் பதவிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணிக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்து காத்துக்கொண்டிருந்த நிலையில் நேர்காணல் நடைபெறும் தேதியும் வெளியிடப்பட்டது. அதன்படி 6,7,8,10,11 மற்றும் 12ம் தேதிகளில் தொடர்ந்து 6 நாட்கள் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருந்தது.
மாநிலங்கள் தோறும் பள்ளி, கல்லூரிகள் மூடல் – கொரோனா பரவல் எதிரொலி! முழு விவரம் இதோ!
ஆனால் தற்போது நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை மறுநாள் முதல் அதாவது 6,7,8,10,11 மற்றும் 12ம் தேதிகளில் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற இருந்த நேர்காணல் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தேதி ஒத்திவைப்பு அறிவிப்பை தருமபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ளார். இந்த நேர்காணல் தேதி ஒத்திவைப்பானது தேர்வர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.