தமிழக அரசின் அனைத்து துறை செயலர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தலைமை செயலரின் அறிவுறுத்தல்!
வர இருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசின் செயலாளர்கள் இனிப்பு வழங்கும் பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் அவர்கள் இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.
தலைமை செயலாளர் அறிவிப்பு:
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் சுற்றுவட்டாரத்தில் இருக்கும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்கின்றது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், ஆவின் பால் கொள்முதல் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களையும் அறிவித்து வருகிறது. பால் மட்டுமில்லாமல் பாலை மூலப்பொருளாக வைத்து செய்யப்படும் இனிப்பு வகைகளும் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – 23 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்!
அரசின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆவின் பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 4ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இன்னாளில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து மகிழ்வது வழக்கம். அந்த வகையில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்வோர் கவனத்திற்கு – முக்கிய விழாக்கள் அறிவிப்பு!
அதன்படி, அனைத்து துறையின் அரசு செயலாளர்களும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் பட்சத்தில் ஆவின் இனிப்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், இதனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு தீபாவளி பண்டிகையை ஒட்டி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.