TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கான தகுதித் தேர்வு வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தகுதி தேர்விற்கான நுழைவுசீட்டினை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வினை நடத்தி தகுதியான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான விண்ணப்பங்களை TNPSC ஏற்கனவே அறிவித்திருந்தது. தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் மொத்தமாக 16 குழந்தை பாதுகாப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் தான் உள்ளன. 16 காலிப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் 12வது தவணை நிதியுதவியை பெற வேண்டுமா? முழு விவரம் இதோ!
தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் நடக்க இருக்கும் இந்த தேர்வு வரும் ஜூன் 19 ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், தமிழிலும் நடத்த TNPSC தேர்வாணையம் அனுமதித்துள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு கொள்குறி வகையில் நடைபெற இருக்கிறது. இந்த தகுதி தேர்விற்கு விண்ணப்பித்திற்கும் விண்ணப்பதாரர்கள் தேர்விற்கான நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வின் நுழைவு சீட்டினை விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்விற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.