தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி பைக்கில் வர அனுமதியில்லை!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன் கருதி கடந்த பிப்ரவரி 1ம் தேதி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது அநேக இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் வேலை தேடுவோருக்கு பயனளிக்கும் சூப்பரான திட்டம் – கரூா் ஆட்சியா் முக்கிய அறிவிப்பு!
மேலும் இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தெரிவித்தாவது, தற்போது பல இடங்களில் மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் இதனை தவிர்க்கும் வகையில் இனி வரும் நாட்களில் பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விதியை மீறி மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால் பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனைத் தவிர்க்க மாணவர்களை தனித்தனி குழுக்களாக 15 நிமிடத்திற்கு ஒரு குழு என்றவாறு அனுப்ப வேண்டும். அத்துடன் அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.