தமிழகத்தில் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுகாதாரத்துறை சுற்றறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமெடுத்து வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தனியார் தொழில் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – பணம் செலுத்தும் வழிமுறைகள்!
இந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களின் உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும். இதில் 99 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை உடையவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு காய்ச்சல், சளி, உடல் வலி, தொண்டை வலி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணியாதவர்களை பணியிடங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
ஜனவரி 24 முதல் 1-12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அத்துடன் அலுவலகத்தில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கை கழுவுவதற்கான வசதிகள், சானிடைசர் வசதிகளை நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதையடுத்து அலுவலக உணவு விடுதிகளில் 50% ஊழியர்கள் மட்டுமே உணவருந்த வேண்டும். ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களும் கடைபிடிக்கிறார்களா என்பதை அந்தந்த மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும். இந்த விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.