தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.19 முதல் தேர்வு!
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. முதல் திருப்புதல் தேர்வுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.
முதல் திருப்புதல் தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வந்தனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டது. அத்துடன் கடந்த நவம்பர் மாதம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் என அனைத்து வகுப்பினருக்கும் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டது. அத்துடன் நடப்பாண்டு முடிவதற்கு குறைந்த நாட்களே உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டது.
ஜனவரி 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாகாண அரசு உத்தரவு!
மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுக்கான பொது தேர்வு கட்டாயமான முறையில் நடைபெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் 10,12ம் வகுப்பு மாணவர்களின் அறிவுத் திறனை சோதிக்கும் விதமாக முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி முதல் திருப்புதல் தேர்வானது ஜனவரி 19-ல் தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு!
அத்துடன் முதல் திருப்புதல் தேர்வு வருகிற ஜனவரி 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இதற்கான விரிவான தேர்வுக் கால அட்டவணையை பள்ளி ஆசிரியர்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அத்துடன் திருப்புதல் தேர்வுக்கான மதிப்பெண்கள் விவரங்களை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.