திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – அறங்காவலர் குழு தலைவர் முக்கிய அறிவிப்பு!
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக திருப்பதி – திருமலை இடையில் உள்ள மலை பாதைகளில் குன்றுகள் சரிந்து விழுந்துள்ளது. இதனை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பதி மலைப்பாதை:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதில் குறிப்பாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் தற்போது திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டது. அதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகை புரிந்தனர்.
ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
கடந்த மாதம் அநேக இடங்களில் கனமழை பெய்து கொண்டிருந்தது. திருப்பதியிலும் கனமழை பெய்த ஏற்பட்ட காரணத்தால் திருப்பதி – திருமலை இடையே உள்ள மலை பாதைகளில் குன்றுகள் சரிந்து விழுந்துள்ளது. அதனால் அங்குள்ள 7, 8, 9, 14 மற்றும் 15-வது வளைவு பாதைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இதற்கு மாற்று பாதையாக லிங்க் பாதை வழியாக வாகனங்கள் தற்போது இயக்கப்படுகிறது. இவ்வாறு போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் இந்த மலைப்பாதைகளில் சரிந்துள்ள குன்றுகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!
அத்துடன் இந்த மலைப்பாதையை சரி செய்ய ஐஐடி நிபுணர்கள் மற்றும் கேரள நிபுணர்கள் ஆகியோரை கொண்டு ஆலோசனை செய்து அதன் படி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சீரமைப்பு பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதன் பின்னர் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அனைத்து பணிகளும் வைகுண்ட ஏகாதசிக்குள் நிறைவடையும் என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.