தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு டிசம்பர் மாதம் நடக்க இருந்த அரையாண்டு தேர்வு திருப்புதல் தேர்வாக மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இம்மாதம் திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி கண்டிப்பாக நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் வழக்கமாக நடைபெறும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அரையாண்டு தேர்வை திருப்புதல் தேர்வாக மாற்றி இம்மாதம் நடத்த அறிவித்திருந்தது.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – சிடிஜி குறித்த முக்கிய முடிவு!
ஒமைக்ரான் தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்தாகி விடுமோ என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் ஜனவரி மாதத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கி விடும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இத்தேர்வுக்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியானது.
ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு, வார இறுதி பொதுமுடக்கம் அமல் – முதல்வர் உத்தரவு!
தற்போது திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 19 ஆம் தேதியிலும் , 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 20 ஆம் தேதியிலும் தொடங்கவுள்ளது. இத்தேர்வை நடத்த தற்போது பள்ளிகளில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. மேலும் நோய் தொற்று காரணமாய் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திருப்புதல் தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது