Post office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பெரும்பாலானோர் இணைகின்றனர். இந்த திட்டங்களில் ஆன்லைன் முறையில் மாத தொகையை செலுத்துவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் சேமிப்பு கணக்கு
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் நடுத்தர வர்க்கத்தினர் முதல் பெரிய பணக்காரர் வரை ஏராளமானோர் இணைகின்றனர். எனில் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதன் மூலமாக வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு பலன்களை பெற முடியும். மத்திய அரசு 9 வகையான சிறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேமிப்பு திட்டங்களில் கணக்கை தொடங்கிய பிறகு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். தற்போது இந்த பிரீமியம் தொகையை ஆன்லைன் முறையில் சுலபமாக செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை வழங்கும் திட்டம் – PIB விளக்கம்!
இதற்கு சேமிப்பு தாரர்கள் முதலில் டிஜிட்டல் கணக்கில் பதிவு செய்திருக்க வேண்டும். இதன் மூலமாக செல்வ மகள் சேமிப்பு திட்டம், பிபிஎஃப் திட்டம் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரீமியம் தொகையை சுலபமாக செலுத்த முடியும். டிஜிட்டல் சேமிப்பு கணக்கை தொடங்க 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அத்துடன் இதில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. இதில் 2 லட்ச ரூபாய் வரை ஒரு ஆண்டுக்கு அதிகபட்ச ஒட்டுமொத்த வைப்புத்தொகையாக சேமிக்கலாம்.
டிஜிட்டல் சேமிப்பு வங்கி கணக்கை திறப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. முதலாவதாக பிளே ஸ்டோரில் IPPB என்ற பேங்கிங் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. அடுத்ததாக அதில் சென்று, ’உங்கள் கணக்கைத் திறக்கவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு மொபைல் எண், பான் எண் உள்ளிட்ட தகவல்களை கொடுத்து ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. இப்பொது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS மூலம் OTP எண் அனுப்பப்படும்.
4. இந்த OTP எண்ணை உள்ளிட்டு அடுத்ததாக ஆதாரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இல்லையெனில் ஆதார் எண் அல்லது ஆதார் விர்ச்சுவல் ஐடியை கைமுறையாக உள்ளிட வேண்டும்.
5. இதையடுத்து ‘செக்பாக்ஸ்’ ஐ டிக் செய்து ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. இப்பொது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS மூலம் OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட்டு, ‘தனிப்பட்ட தகவல்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. அடுத்ததாக தங்களின் விவரங்களை உள்ளிட்டு ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
8. இதையடுத்து ‘PAN & Communication Address’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். விவசாயம் அல்லாத வருமானம், விவசாய வருமானம் மற்றும் குறிப்புகள் ஏதேனும் இருந்தால் அதனை உள்ளிட்டு ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
9. அடுத்த பக்கத்தில் நாமினி பற்றிய விவரங்களை உள்ளிட வேண்டும்.
10. தற்போது ‘கூடுதல் தகவல்’ என்பதைக் கிளிக் செய்து, திருமண நிலை, தொழில், மொத்த ஆண்டு வருமானம், கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்களை கொடுத்து ‘சேவ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
11. இப்போது ‘கணக்கு தகவல்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து கணக்கு அறிக்கையை வழங்குவதற்கான முறையைத் தேர்ந்தெடுத்து மற்றும் ஆதார் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
12. அடுத்ததாக திட்ட பயனாளி ஐடி ஏதேனும் இருந்தால் அதனை உள்ளிட வேண்டும்.
13. இப்போது ‘செக்பாக்ஸில்’ டிக் செய்து ‘சேவ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்து, சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தைம் சரியாக உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
14. இறுதியாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS மூலம் OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட்டு பிறகு டிஜிட்டல் சேமிப்பு வங்கி கணக்கு வெற்றிகரமாக திறக்கப்பட்டு விடும்.