தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு!
தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விருப்ப மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரி தகவல் அளித்துள்ளார்.
மதிப்பீட்டுத் தேர்வு
தமிழகத்தில் தாமதமாக துவங்கப்பட்ட இந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டுக்கு பதிலாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கிடையில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொது மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுமா? அமைச்சரின் விளக்கம்!
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரியில் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தரம் உயர்த்தப்படுவதற்கு முன், மெதுவாகக் கற்கும் மாணவர்களை கண்டறிந்து கூடுதல் பயிற்சி அளிக்க மாணவர்களை மதிப்பீடு செய்வது இன்றியமையாதது. இத்தேர்வுகள் அனைத்தும் பள்ளி வாயிலாக மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விருப்ப மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களிலும் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இப்போது ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள தொழில்நுட்ப உள்கட்டமைப்பை பொறுத்து எழுத்து மற்றும் கணினி முறையில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுக்கான வினாத்தாள்களை தயாரிக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்திருப்பதாகவும் அவை பள்ளிகளுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜன.2 வரை விடுமுறை – மீறி திறந்தால் நடவடிக்கை!
இப்போது அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த பொது மதிப்பீட்டுத் தேர்வுகளின் போது தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.