தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுமா? அமைச்சரின் விளக்கம்!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் தற்போது ஓமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தில் எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி:
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியானது வீரவிளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஈடுபடும் காளைகளுக்கு மண் குத்து, நீச்சல் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும். ஆனால் மிகவும் சிறப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பகுதிகளில் நடைபெறும். அதனால் மதுரை மாவட்டம் என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிக்கு உரித்தானது என்று குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜன.2 வரை விடுமுறை – மீறி திறந்தால் நடவடிக்கை!
ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் பண்டிகையை ஒட்டி மிகவும் பாரம்பரியமாக நடைபெறும். அதனால் இப்போது இருந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உரிய நேரத்திற்கு உணவு, தண்ணீர், தீவனம் அளிக்கப்படுகிறது. ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் மண் குத்துதல் போன்ற பயிற்சிகளும் வழங்கப்படும். மற்ற நாட்களில் கொடுக்கப்படும் தீவனத்தை விட இதற்கு இன்னும் சிறப்பாக பருத்திக்கொட்டை, தவிடு, பேரீச்சம் பழம் போன்ற சத்து மிகுந்த உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் அடக்கும் மாடுபிடி காளையர்களும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்? டிச.31 இல் ஆலோசனை! அமைச்சர் அறிவிப்பு!
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 49ஆம் ஆண்டு அண்ணா விழா நடைபெற்றது. அதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் கலந்து கொண்டார். தற்போது தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ரகுபதி அவர்கள் கூறியதாவது, ஓமைக்ரான் பரவலை தடுக்க அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருந்தால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் ஜல்லிக்கட்டு நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.