தமிழக அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கவனத்திற்கு – முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழக பொதுப்பணித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கான பதிவை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்குமாறு அரசு அறிவித்திருந்தது. தற்போது இது குறித்த முக்கிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொதுப்பணித்துறை:
தமிழகத்தில் அரசு சார்ந்த அனைத்து கட்டிட அமைப்புகளும் பொதுப்பணித் துறையின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது அரசு மருத்துவமனை கட்டிடம், மின் வளாகம், பள்ளி கட்டிடம் உள்ளிட்டவைகள் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு மற்றும் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கட்டிட பணிகளை சிறந்த காலத்திற்குள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் சிலருக்கு வழங்கப்படும்.
IPPB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜன.1 முதல் புதிய விதிமுறை அமல்!
இத்தகைய ஒப்பந்தத்திற்கு ஒப்பந்ததாரர்கள் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்பந்ததாரர்கள் செய்யும் ஒப்பந்த பதிவை வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழக அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என்று அறிவித்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.10 கோடிக்கும் மேலான ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து இரண்டாம் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மூன்றாம் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையும், நான்காம் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையும், ஐந்தாம் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.50 லட்சம் வரை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.