TNPSC கூட்டுறவுத் துறை ரூ.1.7 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

0
TNPSC கூட்டுறவுத் துறை ரூ.1.7 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
TNPSC கூட்டுறவுத் துறை ரூ.1.7 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
TNPSC கூட்டுறவுத் துறை ரூ.1.7 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள 8 உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது . இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு தேர்வு அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால் TNPSC கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் TNPSC அறிவித்துள்ள கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக பணியின் பெயர் உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director of Co-operative Audit) ஆகும்.

தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? அரசுத்துறை வட்டாரங்கள் பரபர தகவல்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு பிரிவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படிப்பை முடித்த நபர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்க படுபவருக்கு மாத சம்பளம் ரூ.56,100 முதல் 1,77,500 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும். மேலும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM உள்ளிட்ட வகுப்பினருக்கு மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு. இப்பணிக்கான தேர்வு ஏப்ரல் 30ம் தேதி, காலை முதல் தாள் மற்றும் மதியம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 21.02.2022 ஆகும். மேலும் பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!