தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? அரசுத்துறை வட்டாரங்கள் பரபர தகவல்!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஊரடங்கு விதிக்கப்படும் என்ற செய்தி பரவலாக பரவி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில் சில விளக்கங்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா மூன்றாம் அலை காரணமாகஅரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்தது. அதனால் இரவு நேர ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் நீட்டிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Post Office பணத்தை அள்ளித்தரும் திட்டம் – தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ்!
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மார்ச் 4ஆம் தேதி கவுன்சிலர்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் பிறகு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற ஒரு தகவல் வாட்ஸ்ப் மூலமாக பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சில அதிகாரிகள் கூறும் போது தமிழகத்தில் தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை சரிந்துள்ளது. எனவே தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு விதிக்கப்படும் என்பது தவறான தகவல் என்கின்றனர்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தற்போது நடைபெற்று வரும் தேர்தலிலும், இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களிலும் அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஆனாலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டிருப்பதால் ஊரடங்கு விதிக்கும் அளவிற்கு பாதிப்புகள் இருக்காது என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் BA.1, BA.1.1, BA.2 மற்றும் BA.3 உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.