CBSE வாரியத்தின் சிறப்பு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு – நாளையுடன் முடிவு!

0
CBSE வாரியத்தின் சிறப்பு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு - நாளையுடன் முடிவு!
CBSE வாரியத்தின் சிறப்பு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு - நாளையுடன் முடிவு!
CBSE வாரியத்தின் சிறப்பு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு – நாளையுடன் முடிவு!

கடந்த மாதத்தில் வெளியான CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான விண்ணப்பதிவு நாளையுடன் (ஆகஸ்ட் 15) முடிவடைகிறது.

தேர்வு விண்ணப்பம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்ட தேர்வு முடிவுகளில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை சிறப்பு தேர்வுகள் நடைபெறும் என கல்வி வாரியம் அறிவித்துள்ளது. நேரடி முறையில் நடத்தப்பட இருக்கும் இந்த விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு செயல்முறையை முடிக்க கடைசி தேதி நாளையுடன் (ஆகஸ்ட் 15) முடிவடைகிறது. இந்த மேம்பாட்டு மற்றும் பிரிவுத் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் CBSE வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Agri Budget 2021 Live Updates – தமிழ்நாடு வேளாண் துறை இ-பட்ஜெட் தாக்கல்!

CBSE கல்வி வாரியத்தின் தேர்வு முடிவுகளில் ‘எசென்ஷியல் ரிபீட்’ என அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பை வழங்க வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த வாய்ப்பின் மூலம், மாணவர்கள் தேர்வுகளை எழுதி அந்த கல்வியாண்டை பூர்த்தி செய்து கொள்ள முடியும். CBSE வாரியத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களின் பட்டியலில், அந்தந்த பள்ளிகள் தங்களது மாணவர்களின் பெயரைச் சேர்க்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பிரிவின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாய்ப்புக்கு தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் ஆகஸ்ட் 25 முதல் நடைபெறும் CBSE வாரியத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் ஒரு மாணவர் CBSE வாரியத் தேர்வுக்கு விண்ணப்பித்து, பின்னர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுத வேண்டாம் என்று முடிவு செய்தால், முன்னதாக அறிவித்த தேர்வு முடிவுகள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும். தவிர மாணவர்கள் தேர்வு எழுதிய பாடங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இறுதி முடிவு தயாரிக்கப்படும். மேலும் CBSE வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய விண்ணப்பதாரர்களின் சேர்க்கை அட்டைகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!