டெல்டாவை தொடர்ந்து வேகமாக பரவும் ‘லாம்ப்டா’ வைரஸ் – சுகாதாரத்துறை விளக்கம்!
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகின்றது. அந்த வகையில் பெரு நாட்டில் பரவி வரும் வீரியமிக்க லாம்ப்டா வகை வைரஸ் இந்தியாவில் இன்னும் கண்டறியபடவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உருமாற்றம்
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா என்ற பெரும் தொற்று சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. இந்த நோய் தொற்றினால் தற்போது வரை மக்கள் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர். உலக அளவில் கோடி கணக்கில் மக்கள் இந்த நோய் தாக்கத்தினால் மரணம் அடைந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உருமாற்றம் அடைந்தது. அதனை டெல்டா பிளஸ் வைரஸ் என்று கூறினர்.
தமிழக தனியார் பள்ளிகளில் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் – ஆணையர் உத்தரவு!
இந்த வைரஸ் தொற்று முன்பு பரவிய வைரஸை விட மிகவும் தீவிரமாகவும், வேகமாகவும் பரவியது. அதன் பிறகு ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ச்சியாக வெவ்வேறு விதமாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. அந்த வைரஸ்களுக்கு ஆல்பா, பீட்டா மற்றும் காமா என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். உலக நாடுகளில் சூழல் இவ்வாறாக இருக்க, பெரு நாட்டில் புதிய வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லாம்ப்டா’ என்று அந்த புதிய வகை உருமாறிய வைரஸ்சிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் இந்த லாம்ப்டா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டிற்கு மட்டும் அல்லாமல் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு இது குறித்து அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதே போல் இந்த வகை வைரஸ் மிகவும் வீரியமிக்கது என்றும் வேகமாக பரவக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் இந்த வகை கொரோனா பரவவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.