தமிழக தனியார் பள்ளிகளில் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் – ஆணையர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 40% கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
கல்வி கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மட்டுமே கற்பிக்கப்பட்டது. இருப்பினும் தனியார் பள்ளிகள் அனைத்தும் முழுமையான கல்வி கட்டணத்தை கடந்த ஆண்டு பெற்றோர்களிடம் பெறுவதற்கு வலியுறுத்தியது. இது தொடர்பாக பெற்றோர்களின் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆந்திர பிரதேசத்தில் ஆகஸ்ட் 16 முதல் நேரடி வகுப்புகள் – வெளியான தகவல்!
இதனால் தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தனியார் பள்ளிகள் கட்டணம் பற்றிய ஆய்வை நடத்தியது. அதன் பின்னர் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறும் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. 2021- 2022ம் கல்வி ஆண்டிலும் கொரோனா 2ம் அலையின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் தற்போது வரை திறப்பது பற்றிய முடிவு எடுக்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், புதிய கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தை கட்டுவதற்கு அறிவுறுத்தியுள்ளதாக பெற்றோர்கள் புகார்கள் எழுப்பியுள்ளனர். இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் புகார்கள் எழுந்துள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்னதாக 40% கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் 35% கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.