ரூ.50,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தசாமிக் கண்டர் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Office Assistant, Watchman, Sweeper, Pump Operator and Other பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Office Assistant, Watchman, Sweeper, Pump Operator and Other பணிக்கென 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
- Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
- மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
Join Our TNPSC Coaching Center
- இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.