ஜூன் 1ம் தேதி வரை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட 20 பகுதிகளில் ஜூன் 1ம் தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவுகிறது. இதனால் கடந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவியது. இந்த கடுமையான வெப்பம் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே மழை பெய்தது. மேலும் கடந்த மாதம் வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்தது. நடப்பு ஆண்டு கோடை காலத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்ததை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 6 நாட்கள் விடுமுறை! பட்டியல் இதோ!
நேற்றைய தகவலின் படி வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது
Exams Daily Mobile App Download
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி , திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய இடங்களில் ஜூன் 1 ம் தேதி வரை இடி, மின்னலுடன் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.