இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றும் நாளையும் (26.06.2021) (27.06.2021) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல் :
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரள அரசு நோய் தடுப்பு பணிகளை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வெளியில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து சேவைகளும் தடை செய்யப்பட்டது. இதனால் மக்களின் நடமாட்டம் குறைந்தது.
ஜூன் 28 முதல் 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
தற்போது கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொற்று எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி குறைந்த எண்ணிக்கையில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. 50% பயணிகளுடன் போக்குவரத்து சேவைகளும் துவங்கியுள்ளது. தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
TN Job “FB Group” Join Now
அதனால் கேரளாவில் வார இறுதி தினங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் இவை நடைமுறைக்கு வந்தது. அதே போல் இந்த வாரமும் இன்றும், நாளையும் (26.06.2021) (27.06.2021) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது, பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிறகு திங்கட்கிழமை தொடங்கி வழக்கம் போல் அளிக்கப்பட்ட தளர்வுகளுடன் கடைகள் இயங்கும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.