ஜூன் 28 முதல் 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
அசாம் மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் ஒரு துணை பிரிவில் கொரோனா பரவல் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த பகுதிகளுக்கும் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
அசாம் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நோய் பரவல் வீதம் தொடர்ந்து குறைந்து வந்ததையொட்டி தற்போது முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அசாம் மாநிலத்தின் கோல்பாரா, பிஸ்வநாத், மோரிகான் மற்றும் போகாக்காட் உள்ளிட்ட துணைப்பிரிவு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவதால், அந்த பகுதிகளுக்கு மட்டும் ஜூன் 28 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 28 முதல் கோவில்கள் திறப்பு – கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
இது குறித்து அசாம் சுகாதார அமைச்சர் கேஷாப் மகாந்தா கூறுகையில், அசாம் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களிலும் ஒரு துணைப்பிரிவிலும் நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளதால் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் பாதிப்புகள் குறைந்துள்ள கம்ரூப்-மெட்ரோ மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் கம்ரூப்-மெட்ரோ மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவானது மாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தொடரும். அனைத்து கடைகளும் தினசரி பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய உத்தரவுகளின்படி, அசாமில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இயக்கம் ஜூலை 4 வரை தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரு நாளில் 165 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.