தமிழகத்தில் ஜூன் 28 முதல் கோவில்கள் திறப்பு – கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் வகை 3 இல் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களில் மத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவில்களில் குறிப்பிட்ட செயல்களுக்கு தடை தொடரும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவில்கள் திறப்பு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற ஜூன் 28ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வகை 3ல் இடம்பெற்றிருக்கும் 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இழப்பீட்டு தொகைக்கு வருமான வரி விலக்கு – மத்திய அரசு!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் கோவில்கள் திறக்கப்படும் நிலையில் எந்த செயல்களுக்கு தடை தொடரும் என்பது குறித்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன்படி கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
பரிசோதனை செய்த பின்பே அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். மேலும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும் தடை தொடரும் என்றும் திருநீறு, குங்குமம் ஆகியவை தட்டில் வைத்து வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார். தமிழகத்தில் சுமார் ஒரு மாத காலத்திற்கு பின் மீண்டும் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.