மே 3 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கேரளாவில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்த போதிலும் பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நாட்டில் கொரோனா பரவலில் முதலிடத்தில் மகாராஷ்டிரா, இரண்டாம் இடத்தில் கேரள மாநிலம் உள்ளது. நேற்று ஒருநாள் நிலவரப்படி கேரளாவில் கொரோனாவால் 19,000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
எனவே கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை 1.27 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 118,673 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அறிவிப்பு!!
கேரளத்தில் நேற்று ஒரு நாள் மற்றும் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,978 ஆக உள்ளது. இதுவரை 1.14 மில்லியன் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும், இரவு 9 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.