11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.6 முதல் பொதுத்தேர்வு – முதல்வர் தகவல்!
கேரள மாநிலத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்பரவல் அச்சத்தினால் பல கல்வி வாரியங்களின் பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பு – தொடக்க கல்வி இயக்குனர்!!
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலினால் கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. மற்ற அனைத்து வகுப்பினரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக தேர்வு நடத்துவது குறித்து கேரள கல்வித்துறை ஆலோசித்து பின்னர், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 28ம் தேதி வரை தேர்வை நடத்தியது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து நடப்பு ஆண்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை ரத்து செய்தும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக கேரள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் செப்டம்பர் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்க இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.