விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் இருந்து விலகும் நடிகர் – அடுத்த ஹீரோ இவரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாலை நேர தொடரான காற்றுக்கென்ன வேலி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கதையின் ஹீரோ சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
காற்றுக்கென்ன வேலி:
சினத்திரையில் எத்தனை சேனல்கள் இருந்தாலும் சீரியல் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதை கவர்வது என்னமோ விஜய் டிவி தான். மற்ற சேனல்களின் சீரியல்கள் என்ன தான் தனக்கென ரசிகர்களை இழுத்தாலும் ஹிட் வரிசையின் பின்னால் தான் உள்ளது. தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வயதினரும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர். இதனால் கதைகளிலும் பல மாற்றங்கள் மற்றும் புதுமைகளுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் கல்லூரியை மையப்படுத்தி நடக்கும் கதைக்களத்துடன் வரும் மாலை நேர தொடரான காற்றுக்கென்ன வேலி சீரியலில் தற்போது ஒரு புதிய மாற்றம் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் ஹீரோவாக அரண்மனைக் கிளி சூர்யா தர்ஷன் மற்றும் கதாநாயகியாக பிரியங்கா குமார் நடித்து வருகின்றனர். தர்ஷனுக்கு சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இவர் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் சீரியலிலும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
வெள்ளித் திரையில் களமிறங்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை – ஹீரோ இவர் தானாம்!
இந்நிலையில், இவர் திடீரென சீரியலில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. காரணம் சில படங்களில் நடிக்க தர்ஷன் ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும், அதனால் தான் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகுவதாகவும் தகவல் வந்துள்ளது. இவருக்கு பதில் இந்த சீரியலில் சுவாமிநாதன் நடிக்க உள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர். பல வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், இவர் கன்னட சீரியல்களிலும் நடித்துள்ளார்.