தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் – முதல்வர் இன்று (நவ 11) துவக்கி வைப்பு!
தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை இன்று (நவ. 11) கரூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க இருக்கிறார்.
இலவச மின் இணைப்பு:
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து கோவை வந்துள்ளார். இன்று கரூர், திண்டுக்கல் மாவட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். கரூர் மாவட்டத்தில் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் பகுதியில் அரசு விழாவில் முதல்வர் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது 6 மாதத்துக்குள் கடந்த 20 ஆண்டுகளில் மின்சாரம் கேட்டு விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இன்று நடைபெற இருக்கும் விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணை வழங்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதன் பின் முதல்வர் திண்டுக்கல் மதுரை சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமிய பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து கொள்ள இருக்கிறார்.