ஜூன் 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – பாட திட்டங்கள் வகுப்பு!!
கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த வகுப்புகளுக்கான பாட திட்டங்கள் இன்னும் வகுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கர்நாடகாவில் ஜூன் 15 ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்க உள்ளது. இருப்பினும், வரும் கல்வியாண்டுக்கான பாட திட்டங்களை வகுக்க எந்தவொரு குழுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என அரசுக்கு கேள்விகள் எழுந்துள்ளது. முன்னதாக ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் கடந்த மே 19 அன்று, பாடத்திட்டங்களை வகுக்க சுகாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் அறிவிப்புகள் வெளியாகி ஒரு வாரத்திற்கும் மேலாகியும், இன்னும் குழு அமைக்கப்படவில்லை.
கொரோனா நிவாரண நிதி அளிக்கும் சிறுவர்களுக்கு பரிசு – முதல்வர் அறிவிப்பு!!
கர்நாடகாவில் 70% மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்க திட்டமிட்டிருந்தாலும், இடைநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்புகள் ஏற்படும். வரும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் இது குறித்த முழுமையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஏறத்தாழ 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு சரியான கல்வி வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என கல்வி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து தன்னார்வலர் ஒருவர் கூறுகையில், ‘அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இம்மாதம் துவங்க உள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும், மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். பெற்றோர்களும் அரசின் முடிவுகளை அறிந்து கொள்ள காத்திருக்கின்றனர். அதனால் மாணவர்களின் செயல்பாடுகளை கவனித்து கொள்ள ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.