கொரோனா நிவாரண நிதி அளிக்கும் சிறுவர்களுக்கு பரிசு – முதல்வர் அறிவிப்பு!!
கொரோனா பணிகளை மேற்கொள்ள அரசுக்கு பலரும் நிவாரணத்தொகைகளை அளித்து வருகின்றனர். சிறுவர்களும் தங்களது சிறிய சேமிப்புகளை அரசுக்கு வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு பரிசு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. மாநில அரசு தொடர்ந்து தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் நோய் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்களுக்கு அரசு நிவாரணத் தொகையை வழங்கி வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வதந்தி குறித்து விளக்கம்!!
இதனால் தங்களால் முடிந்த நிதி உதவிகளை மக்கள் அரசுக்கு அளிக்க வேண்டும். அதை அரசு கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். கொரோனாவை ஒழிக்க மக்கள் பங்களிப்பு அவசியமானதாகும். இதனை ஏற்று செல்வந்தர்கள் அரசியல்வாதிகள், தொழில் நிறுவனங்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், பொதுமக்கள், அறக்கட்டளை அதிகாரிகள் ஆகியோர் முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதிகளை வழங்கி வருகின்றனர். இவர்களை தொடர்ந்து சிறுவர்கள் தங்கள் சிறிய சேமிப்பை அரசுக்கு வழங்கி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த கருணை உள்ளம் மனதை நெகிழ வைக்கிறது. இந்த சிறிய வயதில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அன்பின் உருவமாகும். வீட்டிலுள்ளவர்கள் அளிக்கும் சிறிய தொகையை உண்டியல்களில் குழந்தைகள் சேமித்து வருவர். அந்த தொகையை நோயாளிகளுக்கும், ஏழை மக்களுக்கும் உதவ அளிக்கின்றனர். இவர்களின் இந்த ஈகை பண்பை பாராட்டும் வகையில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பிள்ளை செல்வங்கள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் உலக பொதுமறையான திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.