கர்நாடக மாநில முதல்வரிடம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது கோரிக்கை வைத்துள்ளது.
இலவச சைக்கிள்:
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 2019ம் ஆண்டு வரை இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளால் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட நாள் முதல் பள்ளிகளில் பெண் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க துவங்கியது. மேலும் இத்திட்டம் மூலம் தொடக்க பள்ளிகளில் இடை நீக்கமும் குறைந்தது. எனவே இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளதாக பெலகாவியில் நடந்த சட்டப்பேரவை அமர்வின் போது பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்தார்.
இதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் பயிலும் அனைத்து 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த இலவச சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.