தமிழக இந்து அறநிலைய துறையில் மாதம் ரூ.58600/- சம்பளத்தில் வேலை – தமிழ் தெரிந்தால் போதும்!
சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தமிழ் புலவர், தவில், பிளம்பர், வேதபாராயணம் மற்றும் உதவி பரிச்சாரகர் ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 23.03.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | சென்னை கபாலீஸ்வரர் கோவில் |
பணியின் பெயர் | இளநிலை உதவியாளர், தமிழ் புலவர், தவில், பிளம்பர், வேதபாராயணம் மற்றும் உதவி பரிச்சாரகர் |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கபாலீஸ்வரர் கோவில் காலிப்பணியிடங்கள்:
- இளநிலை உதவியாளர் – 2 பணியிடங்கள்
- தமிழ் புலவர் – 1 பணியிடம்
- தவில் – 1 பணியிடம்
- பிளம்பர் – 1 பணியிடம்
- வேதபாராயணம் – 1 பணியிடம்
- உதவி பரிச்சாரகர் – 1 பணியிடம்
- என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி விவரங்கள்:
- இளநிலை உதவியாளர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி
- தமிழ் புலவர் – B.Lit Tamil OR BA Tamil OR MA Tamil OR M.Lit
- தவில் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தவில் பள்ளிகளில் 3 ஆண்டு பயற்சி பெற்றிருக்க வேண்டும்.
பிளம்பர் – ITI Trade Certificate in Plumber Trade
- வேதபாராயணம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேத ஆசிரமத்தில் 3 வருட பயிற்சி / சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- உதவி பரிச்சாரகர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் வைக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
- இளநிலை உதவியாளர் – ரூ.18500- 58600/-
- தமிழ் புலவர் – ரூ.18500- 58600/-
- தவில் – ரூ.18500- 58600/-
- பிளம்பர் – ரூ.18000 – 56900/-
- வேதபாராயணம் – ரூ.15700 – 50000/-
- உதவி பரிச்சாரகர் – ரூ.10000 – 31500/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.03.2023 க்குள் மாலை 5:45 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.