கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் நாளை மே 21 அன்று மின்மாற்றி அமைக்கும் பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் தடையாகும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மின்தடை:
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதற்காக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம் தடைபடாமல் சீராக கிடைக்க வேண்டும் என்பதற்காக மின் ஊழியர்கள் மூலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியீடு – கல்வித்துறை அறிவிப்பு!
அது போலவே துணை மின் நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரத்தை எவ்வித சேதமின்றி சப்ளை செய்ய டிரான்ஸ்பார்மர் பயன்படுகிறது. அவ்விதமாக நாளைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் கணேசபுரம் பீடரில் உயல் அழுத்த மின் பாதையில் உள்ள இந்து கல்லூரி சாலை, போக்குவரத்து பணிமனையில் டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
அக்காரணத்தால் நாளை(ஜூன் 2) வியாழக்கிழமை அன்றுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அதாவது, சண்முகம் தெரு, தாயகம் தெரு, வெள்ளாளர் காலனி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.