‘கண்ணான கண்ணே’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “கண்ணான கண்ணே” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“கண்ணான கண்ணே” சீரியல்
சன் தொலைக்காட்சியில் பல பாச போராட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “கண்ணான கண்ணே”. நாயகி மீரா தனது தந்தையின் அன்பிற்காக சிறு வயதில் இருந்து ஏங்குகிறார். ஆனால், மீரா பிறந்ததும் அவரது அம்மா மரணம் அடைந்து விடுகிறார். அவரது அப்பா கௌதமின் பிசினஸ் நஷ்டம் அடைந்து விடுகிறது. இதனால் மீரா ராசி இல்லாதவள் என்று அவரது அப்பாவிற்கு தோன்றி, அவரை மொத்தமாக வெறுக்க ஆரம்பித்து விடுகிறார். ஆனால், தனது இரண்டாவது மகள் ப்ரீத்தியின் மீது அலாதியான அன்பு வைக்கிறார்.
ரோஜாவை காப்பாற்ற அர்ஜுன் வைத்திருக்கும் வீடியோ ஆதாரம்? ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!
இப்படியான சூழலில் தான், மீரா யுவாவை காதலிக்கிறார். ஆனால், இருவரது காதலையும் அறியாத அவரது தந்தை ப்ரீத்திக்கும், யுவாவிற்கும் திருமணத்தை நடத்த முடிவு செய்கிறார். இதனால் மீராவிற்கு வருத்தம் ஏற்பட்டாலும், அதனை வெளிக்காட்டாது, தனது தங்கையின் வாழ்விற்காக தனது காதலை விட்டு கொடுக்கிறார். ஆனால், இறுதி நிமிடத்தில் ப்ரீத்தி தன்னால் யுவாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விடுகிறார். இதனால் மீரா மற்றும் யுவா திருமணம் இனிதே நடந்து விடுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் நொந்து போய் விடும் மீராவின் அப்பா விஷத்தினை அருந்தி விடுகிறார். தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மீராவின் அப்பாவை ஹாஸ்பிடலில் சேர்க்கின்றனர். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பரிசோதிக்கும் மருத்துவர்கள், அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் எந்த விஷயத்தினையும் கூறக்கூடாது என்று கூறி விடுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.