கனியாமூர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் துவக்கம் – அமைச்சர் அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை காரணமாக எழுந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் பள்ளியை தீ வைத்து கொளுத்தினார்கள். அதனால் தற்போது அந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடந்து வரும் நிலையில் அது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
நேரடி வகுப்புகள்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை சம்பவம் கடந்த சில வாரமாக தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் மாணவிக்கு ஆதரவாக வன்முறை வெடித்தது. மேலும் போராட்டக்காரர்கள் பள்ளிக்கு சென்று பள்ளி வாகனங்கள் மற்றும் வளாகம் உள்ளிட்ட அனைத்தையும் தீயிட்டு கொளுத்தினார்கள்.
Exams Daily Mobile App Download
பள்ளி வளாகம் முழுவதும் எரிந்து நாசமாகிய நிலையில் அங்கு படித்து வந்த 3000 மாணவ மாணவிகளின் கல்வி நிலை கேள்விக் குறியானது. இந்நிலையில் சென்ற வாரம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 2 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட அறிவிப்பின் படி கனியாமூர் பள்ளியில் 9,10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் எனவும், மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.