கள்ளக்குறிச்சி விவகாரம்: பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் இடம்? முக்கிய அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு காரணமாக மாணவி பயின்ற தனியார் பள்ளி கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அப்பள்ளியில் பயின்ற பிற மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு அந்த மாணவர்கள் படிப்பை தொடரும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரிய நெசலூர் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள் படித்து வந்தார். கடந்த 13ம் தேதி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த போராட்டமானது தற்போது கலவரமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதனிடையே மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மாணவியின் உடலை மறு பரிசோதனை செய்யவேண்டும் என்றும் மாணவியின் தந்தை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவியின் உடலை மறு கூறாய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் மரணம் குறித்து நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணவி பயின்ற பள்ளியில் உள்ள நாற்காலி மேஜைகள் போன்றவற்றை அடித்து நொறுக்கி வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பள்ளியில் பயின்ற 4500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீயில் எரிந்து விட்டது. இதனால் அவர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (ஜூலை 20) கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதனிடையே கலவரம் நடந்த தனியார் பள்ளியில் அமைச்சர்கள் வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக பேசியுள்ள அமைச்சர், பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதாரத்தை பார்க்கும் போது பள்ளி இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு 2 மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிவித்தார். இந்நிலையில் சக்தி மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தேவைப்பட்டால் அரசு மற்றும் வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சேர்க்கைக்கு அனுமதிக்கும் வகையில் சின்ன சேலம் அருகில் முதன்மை கல்வி அலுவலரிடம் அருகில் இருக்கும் அரசு பள்ளிகள் என்னென்ன உள்ளதென்று பார்க்குமாறு கூறியுள்ளதாக தெரிவித்தார்.