தமிழக ரேஷன் கடைகளில் ஜூன், ஜூலை மாத அரிசி விநியோகம் – அரசு விளக்கம்!!
தமிழக ரேஷன் கடைகளில் வழக்கமான மாதாந்திர அரிசி விநியோகத்துடன் ஜூன், ஜூலை மாதத்தில் மத்திய அரசின் இலவச அரிசி விநியோகம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரிசி விநியோகம்:
தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்குவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன் முதல்கட்டமாக ரூ.2,000 மே மாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாத நிவாரண தொகையுடன் 14 வகையான மளிகை பொருட்களையும் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர் சேர்க்கை – அமைச்சர் விளக்கம்!
ஜூன் மாதத்திற்கான நிவாரண தொகையான ரூ. 2,000 மற்றும் மளிகை பொருட்கள் தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக நேற்று முதல் டோக்கன் வழக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் அந்தியோதயா கார்டு காரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அரிசியுடன் ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கூடுதலாக அரிசி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜூன் மாதத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு ஜூன் மாதத்திலும், மே மாத்திக்கான மத்திய அரசின் ஒதுக்கீடு ஜூலை மாதத்திலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய அரிசியின் அளவு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
குடும்ப அட்டையில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து, இம்மாத ஒதுக்கீடு 35 கிலோ மற்றும் நபர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதலாக தலா 5 கிலோ என குறிப்பிட்டு, மொத்தமாக 40 முதல் 115 கிலோ வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபருக்கு கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும் நிலையில் 2 நபருக்கு 10 கிலோ, 3 நபருக்கு 15 கிலோ என்ற அடிப்படையில் அரசு வழங்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.