ஜூன் 8ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!
அஸாம் மாநிலத்தில் கர்பி அங்லாங் மற்றும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டங்களின் 26 கவுன்சில் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் வரும் ஜூன் 8ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
வரும் வாரத்தில் அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் தேர்தலை முன்னிட்டு ஜூன் 8ம் தேதி அன்று கர்பி ஆங்லாங் மற்றும் போடோலாண்ட் டெரிடோரியல் கவுன்சிலில் உள்ள பகுதிகளுக்குள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘அஸாம் ஆளுநர் எண்.1 பிரிவு 25ன் கீழ் ஜூன் 8 அன்று பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அதாவது, கர்பி ஆங்லெங் தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் கீழ் அஸாம் மாநில தேர்தல் ஆணையத்தால் இந்த விடுமுறை அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மத்திய அரசு விளக்கம்!
இப்போது இந்த பொது விடுமுறையானது கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் கீழ் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அல்லாத நிறுவனங்கள், வங்கிகள், தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பிற தொழில்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தடையில்லா வாக்களிப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் வரும் ஜூன் மாதம் 8ம் தேதியன்று கர்பி அங்லாங் மற்றும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டங்களின் 26 கவுன்சில் தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் இத்தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 12ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 7,03,298 வாக்காளர்களில் 3,55,503 ஆண்கள் மற்றும் 3,47,790 பெண்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.