தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு – சுற்றறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் காவல்துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறை அமைச்சக பணியாளர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். மேலும் தற்போது படித்து முடித்து விட்டு பல கனவுகளுடன் வெளியேறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஊரடங்கால் வருவாய் இழந்துள்ளனர். இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க இயலாத நிலையில் பணி நீக்கம் செய்தன.
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
தற்போது தமிழகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. மீண்டும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் காவலர்கள் மற்றும் காவல்துறை அமைச்சக பணியாளர்களின் குழந்தைகளுக்கு வேலை தரும் நோக்கில் ‘காவல் பணியாளர்களின் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு பரிமாற்றம்’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
வேலை தேடும் காவலர்களின் குழந்தைகளுக்கு அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்பான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் இது வழங்கும். இந்த அமைப்பு வேலையை தேடுவதில் குழந்தைகளுக்கு இருக்கும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். விருப்பமுள்ள காவல்துறை பணியாளர்கள் மற்றும் காவல் துறை அமைச்சக பணியாளர்களின் குழந்தைகள் பற்றிய விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் சேர்த்து ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.