தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Airtel மற்றும் VI ரூ.300க்கு கீழ் உள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
ஆகஸ்ட் (15.08.2021) (16.08.2021) (17.08.2021) ஆகிய நாட்களில் புதுச்சேரி, காரைக்கால் போன்ற வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். இதனால் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். குமரிக் கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். வரும் 17 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.